
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இலங்கை தமிழ் மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
பதிவு: 05 Aug 2022, 12:32:35 மணி
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் திரு.ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர் திரு.பி.சண்முகம் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலங்கை தமிழ் மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.